பெங்களூர் கோழிப் பிரியாணி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி – 1 கிலோ
2. பிரியாணி அரிசி – 1 கிலோ
3. நல்லெண்ணெய் – 100 கிராம்
4. தக்காளி -500 கிராம்
5. தயிர் – 1கப்
6. மிளகாய்த்தூள் – 1 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள் போடி – 1/2 தேக்கரண்டி
8. நெய் – 150 கிராம்
9. இஞ்சி – 1 1/2 ஸ்பூன்
10. பூண்டு – 1 1/2 ஸ்பூன்
11. மல்லித்தழை-1 கப்
12. புதினா – 1 1/2 கப்
13. பச்சை மிளகாய் – 5
14. பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் -தேவையான அளவு
15. வெங்காயம் – 500 கிராம்
16. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
17. எலுமிச்சை பழம் – 1
18. நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பெரிய கடாயில் நல்லெண்ணெயுடன் நெய் ஊற்றிப் பாதி வெங்காயம் நறுக்கிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்துத் தனியாக வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டுப் பொரிக்கவும்.
3. அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கியதும், வெங்காயம் போட்டு நன்றாகக் கிளறவும்.
4. பிறகு அதில் பாதியளவு மல்லித்தழை, புதினாவை போட்டு கிளறவும்.
5. பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு வதங்கியவுடன் கோழிக்கறி, தயிர், மல்லித்தூள், 1/2 மூடி எலுமிச்சைச் சாறு, தக்காளி, மீதி மல்லித்தழை, புதினாவையும் போட்டு வேக விடவும்.
6. கோழிக்கறி நன்றாக வெந்ததும், எண்ணைய் மேலே வரும். அப்போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் சூடு நீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
7. தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் உப்பு சேர்க்கவும்.
8. அரிசியை சேர்த்து நன்றாகக் கிளறவும். (அரிசியை 20 நிமிடம் முன்பே ஊற வைத்து நன்றாக வடிகட்டி வைத்திருக்கவும்) அரிசி பாதி வேகும் வரை அதிகமான நெருப்பில் வைத்திருக்க வேண்டும்.
9. அரிசி ஓரளவு வெந்ததும் நெருப்பை குறைத்து விடவும்.
10. கடைசியாகப் பாதி எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.