நாட்டுக்கோழிக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நாட்டுக்கோழி - 500 கிராம்
2. சின்ன வெங்காயம் -200கிராம்
3. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
5. மிளகு - 3 தேக்கரண்டி
6. சீரகம் - 2 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கோழியை மஞ்சள் கலந்த இலேசான சுடுநீரில் போட்டுச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்,மிளகு, சீரகம், மிளகாய் வற்றல் போட்டு வதக்கி வைக்கவும்.
4. அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தில் பாதியளவு எடுத்துப் போட்டு வதக்கவும்.
5. வதக்கியவற்றைத் தனித்தனியாக அரைத்து எடுக்கவும்.
6. ஒரு பாத்திரத்தில் 100 மி.லி நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
7. அதனுடன் நாட்டுக் கோழிக்கறியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. கோழி நன்றாக வதங்கிய பிறகு அரைத்தவற்றை சேர்த்து வதக்கவும்.
9. அதன் பிறகு அத்துடன் மல்லித்தூள்,உப்பு போட்டுத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
10. கோழி வெந்து கெட்டியானதும் இறக்கிவிடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.