கோழிக்கறிக் குருமா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி – 1/2 கிலோ
2. வெங்காயம் – 2 எண்ணம்
3. இஞ்சிப்பூண்டு விழுது – 1 1/2 மேசைக்கரண்டி
4. தக்காளி – 1 எண்ணம்
5. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
7. எலுமிச்சை – 1 எண்ணம் (சிறியது)
8. கறிவேப்பிலை – சிறிது
9. உப்பு – தேவையான அளவு
10. எண்ணெய் – தேவையான அளவு
அரைப்பதற்கு
1. சீரகம் – 1 தேக்கரண்டி
2. சோம்பு – 1 தேக்கரண்டி
3. கசகசா – 1 தேக்கரண்டி
4. பட்டை – சிறு துண்டு
5. ஏலக்காய் – 2 எண்ணம்
6. தேங்காய்த் துருவல் – 5 மேசைக்கரண்டி
7. முந்திரிப்பருப்பு – 8 எண்ணம்
8. பச்சை மிளகாய் – 4 எண்ணம்
9. மல்லித்தழை – சிறிது
10. புதினா – சிறிது.
செய்முறை:
1. கோழிக்கறியைச் சுத்தம் செய்து அதில் எலுமிச்சையைப் பிழிந்துப் பிரட்டி விடவும்.
2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்து அதை ஆற வைக்கவும்.
3. பின்னர் அத்துடன் முந்திரிப்பருப்பு, தேங்காய், புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
4. கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
5. அதில் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்த தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
6. அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து சில நிமிடம் கிளறிவிட வேண்டும்.
7. கோழிக்கறித் துண்டுகளைக் கலந்து, அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றிச் சுமார் 20 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேகவிட்டு இறக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.