கோழிக்கறி மசாலா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோழி - 3/4 கிலோ
2. தயிர் - 1 கப்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. எலுமிச்சம் பழம் - 1 எண்ணம்
5. ஏலக்காய் - 5 எண்ணம்
6. பட்டை - 1 துண்டு
7. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
8. இஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
9. மிளகு - 12 எண்ணம்
10. சீரகம் - 1 தேக்கரண்டி
11. கிராம்பு - 5 எண்ணம்
12. கசகசா - 1 மேசைக்கரண்டி
13. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
14. நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
15. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கோழிக்கறியைப் பெரிய துண்டுகளாக வெட்டிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. சுத்தம் செய்த கோழிக்கறியுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
3. கிராம்பு, பட்டை, ஏலக்காய், மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலா, இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்துச் சிவந்தவுடன் கோழிக்கறியைச் சேர்த்து வேக வைக்கவும்.
5. கோழிக்கறி நன்கு வெந்தபின் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து குழம்பு வற்றி, எண்ணெய் தெளிந்து வந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.