கோழிக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி – 1 கிலோ
2. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
3. சோம்புத்தூள்- 2 தேக்கரண்டி
4. மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி
5. மிளகாய்த் தூள்- 1 1/2 தேக்கரண்டி
6. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
7. முந்திரிபருப்பு – 100 கிராம்
8. கிராம்பு – 2 எண்ணம்
9. பட்டை – 2 துண்டு
10. தேங்காய் – 1 மூடி
11. உப்பு – தேவையான அளவு
12. இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
13. மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
14. தக்காளி – 200 கிராம்
15. வெங்காயம் – 200 கிராம்
16. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. மஞ்சள் தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள், தேங்காய், கசகசா, முந்திரிபருப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்த்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, பட்டை, மிளகாய் போட்டு வதக்கவும்.
3. அத்துடன் வெங்காயத்தை போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
4. அதனுடன், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி வதங்கியதும், அதில் கோழிக்கறித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
6. நன்கு வதங்கியவுடன், அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மிதமான நெருப்பில்ம் நன்கு வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.