செட்டிநாடு சிக்கன் குருமா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி – 1/2 கிலோ
2. பெரிய வெங்காயம் – 3 எண்ணம்
3. தக்காளி – 3 எண்ணம்
4. இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
7. மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
8. சீரகத்தூள் – 1தேக்கரண்டி
9. சோம்புத்தூள் – 1 தேக்கரண்டி
10. தேங்காய் – 1 மூடி
11. கசகசா – 2 தேக்கரண்டி
12. முந்திரி – 10 எண்ணம்
13. வறுகடலை – 25 கிராம்
14. உப்பு – தேவையான அளவு
தாளிக்க
1. நல்லெண்ணெய் – 3 கரண்டி
2. சோம்பு – 1/2 தேக்கரண்டி
3. கிராம்பு – 3 எண்ணம்
4. அன்னாசிப்பூ – 2 எண்ணம்
5. பட்டை – சிறிது
செய்முறை:
1. கோழியைப் பெரிய துண்டுகளாக வெட்டிச் சுத்தம் செய்யவும்.
2. தேங்காய், முந்திரி, கசகசா, வறுகடலையை விழுதாக அரைத்து வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் தாளிக்கக் கொடுத்துள்ளவைகளைப் போட்டுத் தாளிக்கவும்.
5. பிறகு, அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
6. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி நன்றாக வதங்கியதும், கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.
8. கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர் மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
9. பின்னர் அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
10. கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு வேக விடவும்.
11. கோழிக்கறி முழுவதும் வெந்த பின் இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.