செட்டிநாடு நண்டு வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நண்டு – 5 எண்ணம் (பெரியது)
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
3. பூண்டு – 5 பல்
4. இஞ்சி – 1 அங்குலத் துண்டு
5. தக்காளி – 1 எண்ணம்
6. சின்ன வெங்காயம் – 50 கிராம்
7.மிளகாய் வற்றல் – 10 எண்ணம்
8. சீரகம் – 1 தேக்கரண்டி
9. மல்லி – 2 தேக்கரண்டி
10. நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
11. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. நண்டுகளை ஓடு நீக்கி, மஞ்சள் தூள் கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்துச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், சீரகம், மல்லி ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
4. ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. அத்துடன் அரைத்த மசாலாவைச் சேர்த்துப் பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
6. அதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
7. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், நண்டுகளைப் போடவும்.
8. நண்டுகள் நன்கு வெந்து, வாசனை வந்த பின்பு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.