செட்டிநாடு நண்டு குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நண்டு – 1 கிலோ
2. வெங்காயம் – 3 எண்ணம்
3. நாட்டுத் தக்காளி – 4 எண்ணம்
4. மிளகு – 1 தேக்கரண்டி
5. சீரகம் – 2 தேக்கரண்டி
6. சோம்பு – 2 தேக்கரண்டி
7. பூண்டு – 5 பல்
8. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
9. மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
11. உப்பு – தேவையான அளவு
12. நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. நண்டுகளைத் துண்டுகள் செய்து, அதை மஞ்சள்தூள் கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்துச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் வெங்காயம், தக்காளி வதக்கவும்.
5. அதனுடன் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
6. அதனுடன் பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
7. கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில், சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டைப் போட்டு பாத்திரத்தை மூடி வேக விட வேண்டும்.
8. நண்டு நன்றாக வெந்த பிறகு கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு இறக்கி மூடி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.