செட்டிநாடு முட்டைக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 3 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. மல்லித்தழை - 1 மேசைக்கரண்டி
5. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
7. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
8. பூண்டு - 5 பற்கள்
9. இஞ்சி - சிறிய துண்டு
10. மல்லி - 1/2 தேக்கரண்டி
11. மிளகு - 1 தேக்கரண்டி
12. சீரகம் - 1 தேக்கரண்டி
13. பட்டை - சிறிது
14. கறிவேப்பிலை - சிறிது
15. கிராம்பு - 1 எண்ணம்
16. உப்பு - தேவையான அளவு
17. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. முட்டைகளை வேகவைத்து நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், பூண்டு, இஞ்சி, மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றைப் போட்டு இலேசாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கறிவேப்பிலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
4. அத்துடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும்.
5. பின்னர் அதில் கரம் மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
6. கடைசியாக வேக வைத்துள்ள நீளவாக்கில் வெட்டி வைத்த முட்டைகளைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.