பஞ்சாபி முட்டை மசாலா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 4 எண்ணம்
2. வெங்காயம் - 1எண்ணம்
3. பிரியாணி இலை - 1 எண்ணம்
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
6. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
9. தக்காளி - 1 எண்ணம்
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு
மசாலா விழுது
12. வெங்காயம் - 2 எண்ணம்
13. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
14. இஞ்சி - 1 துண்டு
15. பூண்டு - 5 பற்கள்
16. கிராம்பு - 2 எண்ணம்
17. பட்டை - 1 எண்ணம்
18. சோம்பு - 1 தேக்கரண்டி
19. தக்காளி - 2 எண்ணம்.
செய்முறை:
1. மசாலா விழுதுக்குக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் விழுதாக அரைத்து வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான நெருப்பில் வைத்து சில நிமிடங்கள் வதக்கவும்.
3. பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து வதக்கவும்.
5. அதில் உப்பு, கரம் மசாலா சேர்த்து சில நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டிப் போட்டு, மிதமான நெருப்பில் கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.