முட்டை அடைக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
அடை செய்ய
1. கடலைபருப்பு - 1/2 கப்
2. துவரம்பருப்பு - 1/2 கப்
3. முட்டை - 3 எண்ணம்
4. சின்னவெங்காயம் - 10 எண்ணம்
5. பூண்டு - 5 பல்
6. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
7. சோம்பு - 1 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
9. கருவேப்பிலை - சிறிது
குழம்புக்கு
10. புளி - எலுமிச்சை அளவு
11. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
12. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
13. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
14. தேங்காய்த்துருவல் - 1/4 கப்
15. சோம்பு - 1 தேக்கரண்டி
16. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
17. கடுகு - 1 தேக்கரண்டி
18. சின்ன வெங்காயம் - 3 எண்ணம்
19. தக்காளி - 1 எண்ணம்
20. எண்ணெய் - தேவையான அளவு
21. கருவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
2. வெங்காயம், பூண்டு, கருவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஊறவைத்த பருப்புடன் மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்து வைத்திருக்கும் விழுதுடன் முட்டை, மஞ்சள்தூள், நறுக்கிய வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து தோசை கல்லில் சிறிது தடிமனான தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
5. பின் அதைச் சிறிய சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
6. தேங்காய், சோம்பை அரைத்து வைக்கவும்.
7. புளியை கரைத்து வடிகட்டி, அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து வைக்கவும்.
8. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்த பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும்.
9. தாளிசத்துடன் புளிக் கரைசல் கலவையை ஊற்றிக் கொதி வந்தவுடன் தேங்காய் விழுது சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
10. குழம்பு நன்றாக கொதித்து, பச்சை வாசனை நீங்கிய பின்பு, அதில் முட்டை அடைத் துண்டுகளைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.