கேரள மீன் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மீன் – 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் – 1/2 கிண்ணம்
3. இஞ்சி – சிறிது (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
4. பூண்டு – 5 பற்கள்
5. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
6. மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
7. வெந்தயத் தூள் – 1/4 தேக்கரண்டி
8. புளி – சிறிது (புளிக்குப் பதிலாக மாங்காய் துண்டுகளைக் கூட சேர்க்கலாம்)
9. தேங்காய்ப் விழுது – 1 கிண்ணம்
10. தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
11. கடுகு – 1 /2 தேக்கரண்டி
12. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
13. உப்பு - தேவையான அளவு
14. கருவேப்பிலை – சிறிது
முன் குறிப்பு:
1. மீனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
2. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
1. சுத்தம் செய்த மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், வெந்தயத் தூள், கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு அரைத்து சேர்த்துச் சட்டியில் உருட்டினார் போல பிரட்டிக் கொள்ளவும்.
2. புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சட்டியில் ஊற்றி, அடுப்பில் வைத்து வேக விடவும்.
3. மீன் நன்கு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
4. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, கருவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.