கார மீன் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மீன் (முள் அதிகமில்லாதது) – 1/2 கிலோ
2. பெரிய வெங்காயம் – 4 எண்ணம்
3. இஞ்சி, பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
4. தக்காளி – 3 எண்ணம்
5. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
6. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
7. மல்லித் தூள் – 2 மேசைக்கரண்டி
8. கடுகு – 1 தேக்கரண்டி
9. சீரகம் – 1 தேக்கரண்டி
10. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
11. மிளகாய் வற்றல் – 10 எண்ணம்
12. புளி – 50 கிராம்
13. எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
14. கறிவேப்பிலை – 2 கொத்து
15. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. மீனை நன்றாகச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல் போன்றவைகளைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. புளியை 100 மி.லி தண்ணீரில் ஊற வைத்துக் கரைசலாக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போன்றவைகளைப் போட்டுத் தாளிக்கவும்.
5. அத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது, வெங்காயம், மிளகாய் வற்றல், தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.
7. அதில் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டுக் கொதிக்க விடவும்.
8. குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.
9. மீன் வெந்த பின்பு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.