கருவாட்டு மசாலாப் பொரியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நறுக்கிய கருவாடு - 100 கிராம்
2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
3. பூண்டு - 10 பல்
4. தக்காளி - 1 எண்ணம்
5. எண்ணெய் - 50 கிராம்
6. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
7. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
8. சோம்பு - 1/4 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - சிறிது
10. வெந்தயம், சீரகம், சோம்பு - தாளிப்பதற்கு
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கருவாட்டுத் துண்டுகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
3. மிளகாய், தேங்காய்த் துருவல், சோம்பு, உப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து வைக்க வேண்டும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிப்பதற்கான வெந்தயம், சீரகம், சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் மஞ்சள்தூள், வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.
6. அத்துடன் அரைத்த விழுதைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கருவாட்டைப் போட்டுக் கெட்டியாக வந்ததும் இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.