இறால் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்தது)
2. சின்ன வெங்காயம் - 200 கிராம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. தக்காளி - 200 கிராம்
5. இஞ்சிப் பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
6. மிளகாய் தூள் -3 தேக்கரண்டி
7. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
9. சோம்பு - 2 தேக்கரண்டி
10. சீரகம் - 1 தேக்கரண்டி
11. தேங்காய் - 1/2 மூடி
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
14. கறிவேப்பிலை - சிறிது
15. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. தக்காளி 100 கிராம், வெங்காயம் 100 கிராம் எடுத்து அரைத்து வைத்துகொள்ளவும்.
2. தேங்காய், 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சோம்பு, சீரகம் போடவும். நன்கு பொரிந்ததும் கறிவேப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் வெங்காயம் சேர்த்துப் போன்னிறமாக வதக்கவும்.
4. பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. அத்துடன் இறால், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
6. நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி வதங்கியதும் வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து மூடி வைக்கவும்.
7. அதன் பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள், அரைத்து வைத்த தேங்காய், சோம்பு சேர்த்து, உப்பு போட்டு சேர்ந்து வரும் வரை கிளறி விடவும்.
8. கடைசியாக மல்லித் தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.