சங்கரா மீன் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சங்கரா மீன் - 4 எண்ணம்
2. தக்காளி (சிறியது) - 1 எண்ணம்
3. புளி - எலுமிச்சை அளவு
4. பூண்டு - 6 பற்கள்
5. வெங்காயம் - 1 எண்ணம்
6. மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
7. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
9. மிளகு - 3/4 தேக்கரண்டி
10. கடுகு - 1/2 தேக்கரண்டி
11. சீரகம் - 1/2 தேக்கரண்டி
12. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
13. பெருங்காயம் - சிறிது
14. எண்ணெய் - தேவையான அளவு
15. கறிவேப்பிலை - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. சங்கரா மீன் துண்டுகளை மஞ்சள், உப்பு போட்டு நன்கு கழுவிச் சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி வைக்கவும்.
2. தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கி விழுதாக அரைத்து வைக்கவும்.
3. புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கெட்டி கரைசலாகக் கரைத்து வைக்கவும்.
4. புளிக்கரைசலுடன் அரைத்த தக்காளி விழுதைச் நேர்க்கவும்.
5. அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
6. மிளகு, கறிவேப்பிலையைப் பொடியாகத் தட்டி வைக்கவும்.
7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.
8. அதன் பிறகு அதில் தட்டி வைத்த மிளகு கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
9. நன்கு வாசம் வந்ததும் தக்காளி, புளிக் கரைசலைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
10. நன்கு கொதி வந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு வாணலியை மூடி வைக்கவும்.
11. மிதமான நெருப்பில் வைத்து, மீன் துண்டுகள் வெந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.