நெத்திலி மீன் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நெத்திலி மீன் – 1/2 கிலோ
2. புளி – 2 எலுமிச்சை அளவு
3. கடுகு – 1/2 தேக்கரண்டி
4. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
5. வெங்காயம் – 3 எண்ணம்
6. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
7. தக்காளி – 3 எண்ணம்
8. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
9. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
10. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
11. பச்சை மிளகாய் – 6 எண்ணம்
12. எண்ணெய் – தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
14. கறிவேப்பிலை – சிறிது
15. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. மீனை மஞ்சள் தூள் கலந்து வைத்துச் சிறிது நேரத்திற்குப் பின்பு சுத்தம் செய்து கொள்ளவும்.
2. புளியைச் சிறிது தண்ணீர் கலந்து கரைத்து வடித்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. பச்சை வாசனை போன பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. அத்துடன் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
7. அதன் பிறகு, சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனைப் போட்டு மீன் வெந்தவுடன் இறக்கவும்.
8. இறக்கிய பின்பு அதில் மல்லித்தழை தூவவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.