இறால் குருமா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. இறால் - 1/4 கிலோ
2. வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 100 கிராம்
4. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
5. மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - சிறிது
7. தேங்காய் - 1/2 மூடி
8. இஞ்சி - சிறிய துண்டு
9. பூண்டு - 4 பல்
10. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
11. கசகசா - 1/4 தேக்கரண்டி
12. சோம்பு - 1/2 தேக்கரண்டி
13. கறிவேப்பிலை - சிறிது
14. உப்பு - தேவையான அளவு
15. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. இறாலை மஞ்சள் தூள் கலந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்து சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும்.
2. தேங்காய், இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, கசகசா, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
4. அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
5. பிறகு அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சேர்த்து கிளறி அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
7. தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து, அதனுடன் இறாலை போட்டு வெந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.