பாறை மீன் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாறை மீன் – 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் – 100 கிராம்
3. தக்காளி – 3 எண்ணம்
4. பச்சை மிளகாய் – 6 எண்ணம்
5. தேங்காய் – பெரிய மூடி 1
6. சோம்பு – 2 தேக்கரண்டி
7. வெந்தயம் – 1 தேக்கரண்டி
8. புளி – தேவையான அளவு
9. மிளகாய்த்தூள் – 2 1/2 – தேக்கரண்டி
10. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
11. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
12. நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி
13. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் மீனை கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளவும்.
2. தேங்காயை துருவி அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் , சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துத் தனியே வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் புளியை ஊற வைக்கவும்.
4. வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி விடவும்.
5. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு மற்றும் வெந்தயத்தைப் போட்டு பொறிந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
6. பிறகு தக்காளியை போட்டு வதக்கவும். அதனுடன் தேங்காய் விழுதுக் கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
7. புளி கரைசலை ஊற்றவும். அதனுடன் கழுவி வைத்த மீன், உப்பு சேர்க்கவும்.
8. குழம்பு நன்றாகக் கொதித்து மசாலா வாசனை நீங்கியதும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.