கேரளா மத்தி மீன் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மத்தி மீன் – 1/2 கிலோ
2. கறி மசாலா – 50 கிராம்
3. வெங்காயம் – 2 எண்ணம்
4. தக்காளி – 3 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. மிளகாய்த் தூள் -2 தேக்கரண்டி
7. மல்லித் தூள் -1 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
9. சோம்பு -1 1 /2 தேக்கரண்டி
10. புளி – எலுமிச்சை அளவு
11. தேங்காய் – 1 /2 மூடி
12. உப்பு – தேவையான அளவு
13. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. மத்தி மீனை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. தேங்காயுடன், சோம்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3. புளியை நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
4. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
5. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கறிமசாலா போட்டுத் தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி நன்றாக வதங்கியதும் எல்லா மசாலாக்களையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
8. அதன் பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும்.
9. குழம்பு நன்கு கொதித்ததும் மீன் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
10. அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் இறக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.