சில்லி பிஷ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வஞ்சிரம் மீன் -1/2 கிலோ
2. எண்ணெய் - தேவையான அளவு
3. சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி
4. சோய் சாஸ் -1/2 மேசைக்கரண்டி
5. கரம் மசாலாத் தூள் - 1 மேசைக்கரண்டி
6. மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
7. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
8. பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 5 எண்ணம்
9. தயிர் - 1/2 கப்
10. எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
12. சிவப்பு நிறத்தூள் (உணவுக்கானது) - 1 சிட்டிகை
செய்முறை:
1. முதலில் தயிர், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், சில்லி சாஸ், எலுமிச்சைச் சாறு, சிவப்பு நிறத் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
2. வஞ்சிரம் மீன் துண்டுகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒவ்வொரு மீனையும் கலந்து வைத்துள்ள மசாலாக் கலவையில் முக்கி எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
4. பின்னர் தோசை தவாவில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொரு மீன் துண்டாக வைத்து, திருப்பிப் போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வெந்து சிவந்து வந்ததும் எடுத்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.