ஆட்டுக்கறிக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 1/2 கிலோ
2. தக்காளி - 2 எண்ணம்
3. வெங்காயம் - 4 எண்ணம்
4. சீரகம் -1 தேக்கரண்டி
5. மிளகு - 1 தேக்கரண்டி
6. சோம்பு - 1 தேக்கரண்டி
7. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
8. மிளகாய் - 4 எண்ணம்
9. பூண்டு - 6 பற்கள்
10. பட்டை, லவங்கம் - சிறிது
11. இஞ்சி - சிறிது
12. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. ஆட்டுக் கறியைச் சுத்தம் செய்து வேக வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், மிளகு, மிளகாய் வற்றல் போன்றவைகளைப் போட்டு வதக்கி அரைக்கவும்.
3. வெங்காயம், தக்காளி ஆகியவற்றைத் துண்டுகளாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி அரைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்க்கவும்.
5. அதன் பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காய விழுதைச் சேர்க்கவும்.
6. இதில் வேக வைத்த கறியைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி மிதமான நெருப்பில் வேக வைக்கவும்.
7. தேங்காய்த்துருவலை பசை போல் அரைத்துக் கறி வெந்ததும் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.