செட்டிநாடு ஆட்டு எலும்புக்கறிக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. எலும்புடனான ஆட்டுக்கறி - 500 கிராம்
2. மிளகு - 1 1/2 தேக்கரண்டி
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. சோம்பு - 1 தேக்க்ரண்டி
5. ஏலக்காய் - 2 எண்ணம்
6. பிரியாணி இலை - 3 எண்ணம்
7. கிராம்பு - 3 எண்ணம்
8. பட்டை - சிறிய துண்டு
9. மல்லி - 1 தேக்கரண்டி
10. முந்திரி - 4 எண்ணம்
11. வெங்காயம் - 2 எண்ணம்
12. தக்காளி - 1 எண்ணம்
13. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக் கரண்டி
14. கருவேப்பிலை - சிறிது
15. மிளகாய்த் தூள் - 3/4 தேக்கரண்டி
16. மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
17. தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
18. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள், 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து அரை வேக்காட்டில் வேக வைத்து இறக்கவும்.
2. ஒரு வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, மல்லி போட்டு வறுத்துப் பொடிக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணைய்யைக் காய வைத்துக் காய்ந்ததும், கருவேப்பிலை , இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் வறுத்துப் பொடித்த பொடி,உப்பு,தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு பிரட்டவும்.
5. அத்துடன் ஆட்டுக்கறியைச் சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்.
6. வெந்தவுடன் சிறிது தண்ணீர் ஊற்றிச் சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.