ஆட்டுக்கறி சுக்கா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 500 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. மிளகுத்தூள் - 1தேக்கரண்டி
8. சீரகத்தூள்- 1/2 தேக்கரண்டி
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. சோம்பு- 1 தேக்கரண்டி
11. இஞ்சிப் பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது
13. புதினா - சிறிது
14. மல்லித்தழை - சிறிது
15. உப்பு - தேவையான அளவு
16. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. ஆட்டுக்கறியை சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
3. ஆட்டுக்கறியைக் கழுவி உப்பு, மஞ்சத்தூள் சேர்த்து வேக வைத்துத் தனியாக வைக்கவும்.
4. கடாயில் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுச் சிறிது வதங்கியதும், இஞ்சிபூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
6. அத்துடன் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
7. பின்னர் அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
8. அதனுடன் மல்லித்தழை, புதினா சேர்த்து, வேகவைத்த ஆட்டுக்கறியைப் போட்டுக் கிளறி விடவும்.
9. மசாலா, ஆட்டுக்கறியோடு சேர்ந்து நன்கு கெட்டியானதும் மிளகு, சீரகத்தூள் தூவி நன்கு கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.