ஆட்டுக்கறிக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி – 1/2 கிலோ
2. பெரிய வெங்காயம்- 1 எண்ணம்
3. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
4. தக்காளி – 1 எண்ணம்
5. இஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
7. கறிவேப்பிலை - சிறிது
8. மல்லித்தழை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. சிறிய வெங்காயம் – 1 கப்
11. கறி மசாலாத் தூள் – 1 மேசைக்கரண்டி
12. எண்ணெய் - தேவையான அளவு
13. தேங்காய்ப்பால் - 1/4 கப்.
செய்முறை:
1. சுத்தம் செய்த ஆட்டுக்கறியுடன் 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் 1 கப் சிறிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
3. வதக்கிய வெங்காயத்தை மசாலாத்தூள் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
5. பின் அதில் தக்காளி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியதும், அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்.
7. பின் தேவையான தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வேகவைத்த ஆட்டுக்கறியைச் சேர்த்துப் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
8. அதனுடம் தேங்காய்ப் பால் விட்டுக் கொதிக்க விடவும்.
9. குழம்புப் பதத்திற்கு வந்ததும், மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.