செட்டிநாடு மட்டன் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 1/2 கிலோ
2. சீரகம் - 1 தேக்கரண்டி
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. சோம்பு -1 தேக்கரண்டி
5. பட்டை - 1 துண்டு
6. கிராம்பு - 3 எண்ணம்
7. அன்னாசிப் பூ - 3 எண்ணம்
8. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
9. இஞ்சி - சிறு துண்டு
10. பூண்டு - 10 எண்ணம்
11. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
12. கருவேப்பிலை - சிறிது
13. மல்லித்தழை - சிறிது
14. தக்காளி - 2 எண்ணம்
15. சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
16. தேங்காய்த் துருவல் - 5 தேக்கரண்டி
17. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஆட்டுக்கறியைக் கழுவிச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, மிளகு, அன்னாசிப்பூ, மிளகாய் வற்றல் அனைத்தையும போட்டு நன்றாக வதக்கவும். வதக்கியவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் சின்ன வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கி, அதை ஆற வைத்து அரைத்து வைக்கவும்.
4. தேங்காய்த் துருவலை அரைத்துத் தேங்காய்ப் பால் எடுத்து வைக்கவும்.
5. ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும், கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், அரைத்து வைத்து இருக்கும் மசாலா சேர்த்து வதக்கவும்.
6. சிறிது நேரம் கழித்து, அரைத்து வைத்திருக்கும் தக்காளி, வெங்காய விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும்.
7. அத்துடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் ஆட்டுக்கறியைப் போட்டுக் கிளறி விடவும்.
8. மசாலா நன்றாகக் கறியில் ஏறும் வரை கறியை அடி பிடிக்காமல் கரண்டியால் பிரட்டி விடவும்.
9. அதில் அளவான தண்ணீரை ஊற்றி, மிதமான நெருப்பில் கறி நன்றாக வேகும் வரை வேக வைக்கவும்.
10. குழம்பில் தேங்காய்ப் பால் சேர்த்து இலேசாகக் கொதிக்க விடவும்.
11. கடைசியாக குழம்பில் மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.