மட்டன் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மட்டன் – 1/2 கிலோ
2. பட்டை – 1 எண்ணம்
3. கிராம்பு – 2 எண்ணம்
4. ஏலக்காய் – 2 எண்ணம்
5. அன்னாசிப்பூ – 1 எண்ணம்
6. வெங்காயம் – 2 எண்ணம்
7. தக்காளி – 2 எண்ணம்
8. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
9. தேங்காய் பால் – 1கப்
10. இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
11. உப்பு – தேவையான அளவு
12. மல்லித்தழை – சிறிது
13. எண்ணெய் – தேவையான அளவு
மசாலா
14. பட்டை – 1 எண்ணம்
15. கிராம்பு – 2 எண்ணம்
16. ஏலக்காய் – 2 எண்ணம்
17. சீரகம் – 1 தேக்கரண்டி
18. சோம்பு – 1 தேக்கரண்டி
19. மிளகாய் வற்றல் – 5 எண்ணம்
20. மல்லி – 2 தேக்கரண்டி
21. தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி
22. முந்திரிப்பருப்பு – 5 எண்ணம்.
செய்முறை:
1. மட்டனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளியைத் தனித்தனியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியை வெறுமனே அடுப்பில் வைத்து, அது காய்ந்ததும் மசாலாவிற்குக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டுச் சில நிமிடங்கள் வறுத்து இறக்கவும்.
4. வறுத்து வைத்தது ஆறிய பின்பு , அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நல்ல விழுதாகவும், சற்று கெட்டியாகவும் அரைத்து வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் வதங்கிப் பொன்னிறமானதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
7. பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டுச் சில நிமிடம் வதக்கவும்.
8. பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, மிதமான நெருப்பில் கிளறி விடவும்.
9. அதன் பின்னர் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தை மூடியிட்டு வேகவைக்கவும்.
10. கறி நன்கு வெந்ததும், அதில் தேங்காய்ப் பால் சேர்த்து, மிதமான நெருப்பில் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
11. இறக்கி வைத்த குழம்பில் மேலாக மல்லித்தழையைத் தூவி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.