மட்டன் மிளகுக் கறி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 1/4 கிலோ
2. சாம்பார் வெங்காயம் - 15 எண்ணம்
3. பூண்டு -15 பல்
4. இஞ்சி-1 துண்டு
5. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
6. மிளகுத்தூள் – 2 மேசைக்கரண்டி
7. மஞ்சள் தூள்- 2 மேசைக்கரண்டி
8. மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
9. சீரகத் தூள் - 2 தேக்கரண்டி
10. சோம்பு -1 மேசைக்கரண்டி
11. கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
12. இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
13. தேங்காய் (அரைத்தது) - 2 மேசைக்கரண்டி
14. மல்லித் தழை - சிறிது
15. கறிவேப்பில்லை - சிறிது
16. உப்பு - தேவையான அளவு
17. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. ஒரு கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் ஆட்டுக்கறியை சிறிது உப்பு, மஞ்சள் ஆகியவை போட்டு, அதனுடன் சிறிது இஞ்சி துண்டு தட்டிச் சேர்த்து வதக்கவும்.
2. கறி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு சேர்த்துத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுதை வாசம் போகும் வரை வதக்கவும்.
4. பின்னர் அதில் நறுக்கிய வெங்கயத்தை சேர்த்து வதக்கவும், வதங்கியதும் கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
5. அத்துடன் மிதமான நெருப்பில் வைத்து மிளகுத் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்துக் கிளறவும்.
6. அதில் வேகவைத்த கறியைச் சேர்க்கவும், உப்பு, தேங்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
7. எண்ணெய் வெளியேறி வரும்போது இறக்கி மேலாக மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.