கேரள மட்டன் குருமா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மட்டன் – 1/2 கிலோ
2. வெங்காயம் – 2 எண்ணம்
3. இஞ்சி – 1 துண்டு
4. பூண்டு – 5 பல்
5. தேங்காய்ப் பால் – 1/2 கப்
6. பட்டை – 1 துண்டு
7. ஏலக்காய் – 3 எண்ணம்
8. கிராம்பு – 3 எண்ணம்
9. சோம்பு – 1 தேக்கரண்டி
10. கசகசா – 1 தேக்கரண்டி
11. மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி
12. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
13. முந்திரி – 11 எண்ணம்
14. மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
15. வினிகர் – 1 தேக்கரண்டி
16. எண்ணெய் – தேவையான அளவு
17. மல்லித்தழை – சிறிது
18. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.
2. பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்துச் சிறிது நேரம் கிளறி இறக்கி ஆற விடவும். ஆறிய பின்பு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. முந்திரிப்பருப்பை விழுதாக அரைத்து வைக்கவும்.
4. சுத்தம் செய்த ஆட்டுக்கறியை குக்கர் அல்லது கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, நன்கு வேக வைத்து இறக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள விழுது, தேங்காய்ப்பால், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
6. பின் வேக வைத்த ஆட்டுக்கறியை நீருடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும்.
7. அத்துடன் வினிகர், முந்திரிப்பருப்பு விழுது சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.