தலைக்கறிக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டு தலை - 1 எண்ணம் (துண்டுக்கறிகளாக வெட்டி வாங்கவும்)
2. வெங்காயம் - 3 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
6. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
8. மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. தேங்காய்த் துருவல் - 1 கப்
11. எண்ணெய் - 4 தேக்கரண்டி
12. பட்டை- 1 எண்ணம்
13. ஏலக்காய் - 2 எண்ணம்
14. கிராம்பு - 2 எண்ணம்
15. உப்பு - தேவையான அளவு
16. கறிவேப்பிலை-சிறிது
17. கொத்தமல்லி-சிறிது
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
5. தக்காளி நன்கு வதங்கியதும் சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் தலைக்கறியைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் 5 விசில் வரை விடவும்.
7. குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
8. கொதித்த பின்பு தலைக்கறிக் குழம்பில் மல்லித்தழைதூவி பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.