ஆட்டுக் குடல் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சுத்தம் செய்த குடல் - 1
2. இஞ்சி - சிறு துண்டு
3. சின்ன வெங்காயம் - 50 கிராம்
4. பெரிய வெங்காயம் - 150 கிராம்
5. தக்காளி - 200 கிராம்
6. மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
7. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
8. பூண்டு - 4 பல்
9. தேங்காய்துருவல் - 1/2 கப்
10. சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
11. சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
12. பட்டை - 2 துண்டு
13. லவங்கம் - 2 எண்ணம்
14. ஏலம் - 1 எண்ணம்
15. சோம்பு - சிறிதளவு
16. நல்லெண்ணெய் - தேவையான அளவு
17. உப்பு - தேவையான அளவு
18. மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
1. வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. குடலை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
3. முதலில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் ஆகியவற்றை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, சோம்பு, லவங்கம், ஏலம் போட்டு தாளித்த பின் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
5. வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
6. அடுத்து தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சோம்புத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கிய பின்னர் சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்த்துக் குக்கரை மூடி போட்டு 10 விசில் விட்டு இறக்கவும்.
8. விசில் போனவுடன் குக்கரில் மூடியைத் திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதுக் கலவையைச் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லித் தழை தூவி இறக்கவும்.
குறிப்பு: குடலை வேகவிடும் போது, தண்ணீர் அதிகமாகச் சேர்க்கக் கூடாது. குடல் தண்ணீர் விட்டு வேகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.