ஆட்டுக்கறி மசாலாக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி – 1/2 கிலோ
2. மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
3. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
4. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
5. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
7. கடுகு – 1/2 தேக்கரண்டி
8. சின்ன வெங்காயம் – 200 கிராம்
9. தக்காளி – 150 கிராம்
10. இஞ்சி – சிறிதளவு
11. பூண்டு – 15 பல்
12. மல்லித்தழை – சிறிதளவு
13. நல்லெண்ணெய் – 100 மி.லி
14. உப்பு தேவையான அளவு
செய்முறை:
1. ஆட்டுக்கறியை முதலில் நன்கு வேக வைத்து எடுத்து வைக்கவும்.
2. வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
3. பின்பு அதை ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
4. இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. மற்றொரு சட்டியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் விட்டு தாளிக்கவும்.
6. பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும்.
7. பின்பு இஞ்சி, பூண்டு விழுதைப் பச்சைத்தன்மை போகும் வரை நன்கு வதக்கவும்.
8. அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.
9. பின்பு அரைத்த மிளகாய், சீரகக் கலவையை சேர்க்கவும்.
10. பின்னர் வேக வைத்த ஆட்டுக்கறி, உப்பு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
11. கடைசியாக நறுக்கிய மல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.