மட்டன் கொத்துக்கறி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி (கொத்துக்கறி) - 300 கிராம்
2. சின்ன வெங்காயம் - 200 கிராம்
3. இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
4. பட்டை - 1 துண்டு
5. கிராம்பு - 4 எண்ணம்
6. மஞ்சள் தூள் - சிறிதளவு
7. பூண்டு - 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
8. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
9. மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
10. சோம்புத் தூள் - 1 தேக்கரண்டி
11. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
12. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
13. கறிவேப்பிலை - சிறிதளவு
14. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. மட்டன் கொத்துக் கறியை இஞ்சிப்பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
2. தண்ணீரை இறுத்து கொத்துக் கறியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
4. அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
5. அத்துடன் வேக வைத்த கொத்துக் கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.
6. பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.