தலைக்கறிக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுத்தலை – 1 எண்ணம்
2. தேங்காய்த் துருவல் – ½ கப்
3. சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 1 கப்
4. தக்காளி – 2 எண்ணம்
5. உப்பு – தேவையான அளவு
6. மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
8. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
9. கரம் மசாலாத் தூள் – ½ தேக்கரண்டி
10. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
11. மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
12. சீரகம் – ¼ தேக்கரண்டி
13. சோம்பு – ¼ தேக்கரண்டி
14. கறிவேப்பிலை – சிறிதளவு
15. மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை:
1. ஆட்டுத்தலையைச் சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும்.
2. ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம், சோம்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்தடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
4. பின் தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி வதங்கியவுடன், உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
6. அதன் பிறகு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
7. வெட்டி வைத்துள்ள தலைகறியைச் சேர்த்துக் கொள்ளவும்.
8. கறியுடன் மசாலாவை நன்கு கலந்து விடவும்.
9. மிக்சியில் ½ கப் தேங்காய், சோம்பு, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
10. அரைத்த தேங்காய் விழுதைக் கறியுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
11. குக்கரை மூடி 4 முதல் 5 விசில் விட்டு இறக்கி, நறுக்கிய மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.