தலைக்கறிக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுத் தலை – 1 எண்ணம்
2. மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி
3. மல்லித்தூள் – 3 மேசைக்கரண்டி
4. மஞ்சள் தூள் – 1/4 மேசைக்கரண்டி
5. பட்டை – 3 துண்டுகள்
6. ஏலக்காய் - 2 எண்ணம்
7. கிராம்பு - 3 எண்ணம்
8. வெங்காயம் – 5 எண்ணம்
9. தக்காளி - 4 எண்ணம்
10. இஞ்சி பூண்டு விழுது – 4 மேசைக்கரண்டி
11. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
12. தேங்காய் பால் – 1/2 கப்
13. மல்லித்தழை – சிறிது
14. புதினா – சிறிது
15. எண்ணெய் – தேவையான அளவு
16. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. ஆட்டின் தலையை நன்றாகச் சுத்தம் செய்து வாங்கி வரவும்.
2. ஆட்டின் நாக்கைத் தனியாக எடுத்து அதை கொதிக்கும் நீரில் போட்டு அதன் மேற்தோலைப் பிரித்தெடுக்கவும்.
3. ஆட்டின் தலையை நன்றாகக் கழுவி, அதனுடன் உப்பு, மஞ்சள், 1 மேசைக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் குக்கரில் வேகவிடவும்.
4. வேக வைத்த ஆட்டின் தலையைத் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டுத் தாளித்து, அதனுடன் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. பிறகு, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
7. பின்னர் அதில் வேகவைத்த ஆட்டின் தலையைச் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும்.
8. அதனுடன் மல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், மசாலாத்தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும்.
9. பிறகு தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போட்டுக் கிளறவும். தீயை பத்து நிமிடம் குறைவாக வைக்கவும்.
10. கடைசியாக, தேங்காய்ப் பால் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.