மட்டன் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 3/4 கிலோ
2. சின்ன வெங்காயம் - 250 கிராம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
6. பட்டை - 2 எண்ணம்
7. மிளகு - 1 தேக்கரண்டி
8. சீரகம் - 1 தேக்கரண்டி
9. சோம்பு - 1 தேக்கரண்டி
10. கசகசா - 1/2 தேக்கரண்டி
11. தேங்காய் - 1 மூடி
12. இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
13. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
14. கிராம்பு - 2 எண்ணம்
15. ஏலக்காய் - 2 எண்ணம்
16. பிரியாணி இலை - 1 எண்ணம்
17. கறிவேப்பிலை - சிறிது
18. எண்ணெய் - தேவையான அளவு
19. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஆட்டுக்கறியை ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்து, நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள ஆட்டுக்கறி, ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் வரை வேகவிட்டு இறக்கவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
4. அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தைப் போட்டு வதக்கி இறக்கவும்.
5. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துச் சிறிது நேரம் ஆற வைக்கவும்.
6. பின் வதக்கி ஆற வைத்த அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, விழுதாக அரைத்து வைக்கவும்.
7. பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும்.
8. தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.
9. வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
10. பின் வேக வைத்துள்ள ஆட்டுக்கறியை வேகவைத்த தண்ணீர் சிறிது சேர்த்து ஒரு கொதி வரை வேக விடவும்.
11. அத்துடன் தேங்காய்க் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டுக் கொதிக்க விடவும்.
12. கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.