செட்டிநாடு ஆட்டுக்கறிக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 1/2 கிலோ
2. பட்டை - 1 எண்ணம்
3. கிராம்பு - 2 எண்ணம்
4. ஏலக்காய் - 2 எண்ணம்
5. அன்னாசிப்பூ - 1 எண்ணம்
6. வெங்காயம் - 2 எண்ணம்
7. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
9. தக்காளி - 2 எண்ணம்
10. தேங்காய் பால் - 1 கப்
11. உப்பு - தேவையான அளவு
12. மல்லித்தழை - சிறிது
13. எண்ணெய் - தேவையான அளவு
மசாலாப் பொருட்கள்
1. பட்டை - 1 எண்ணம்
2. கிராம்பு - 2 எண்ணம்
3. ஏலக்காய் - 2 எண்ணம்
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. சோம்பு - 1 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
7. மல்லி - 2 தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
9. முந்திரிப்பருப்பு - 5 எண்ணம்.
செய்முறை:
1. ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்துப் பிரட்டி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மசாலாப் பொருட்கள் அனைத்தையும் போட்டுச் சிறிது வறுத்து இறக்கவும்.
4. வறுத்தது ஆறிய பின்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாகச் சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில், ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
6. அத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு வதக்கவும்.
7. அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, மிதமான நெருப்பில் வைத்துக் கிளறி விடவும்.
8. சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டுக்கறியைச் சேர்த்து, அத்துடன் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
9. அதில் தேங்காய்ப் பால் சேர்த்து மிதமான நெருப்பில் கொதிக்க விடவும்.
10. குழம்பு நன்கு கொதித்தும், மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.