நத்தைக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நத்தை - 1/2 கிலோ
2. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
8. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
9. மல்லித்தழை - தேவையான அளவு
10. கறிவேப்பிலை - தேவையான அளவு
11. தேங்காய் விழுது - 1/4 கப்
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. நத்தை ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.
2. வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியைச் சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.
6. அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
7. அடுத்து நத்தைக் கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. நத்தைக் கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டுக் கறியை நன்கு வேக விடவும்.
9. கறி நன்கு வெந்த வாசம் வந்ததும் அடுப்பை அணைத்துக் குழம்பை இறக்கி அதில் பொடியாக நறுக்கிய மல்லித்தழையினைத் தூவிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.