பருப்புப் பாயாசம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கடலைப்பருப்பு - 1 கப்
2. வெல்லம் -1 கப்
3. தேங்காய்ப் பால் - 2 கப்
4. பால் - 1 கப்
5. முந்திரிப்பருப்பு - 20 எண்ணம்
6. சுக்குப் பொடி - 1 சிட்டிகை
7. நெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வெல்லம் கரையும் வரை நன்கு சூடேற்றிய பின் அதனை வடிகட்டித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
3. வறுத்த கடலைப்பருப்பைக் குக்கரில் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 8 விசில் விட்டு இறக்கி, விசில் போனவுடன் சற்று மசித்து வைத்துக் கொள்ளவும்.
4. நெய்யில் முந்திரியை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
5. அதன் பிறகு, வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ளக் கடலைப்பருப்பைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
6. கடைசியில் பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்றாக ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.
7. பிறகு, பாயசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப்பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகக் கொதிக்க வைத்து இறக்கவும்.
8. வறுத்த வைத்திருக்கும் முந்திரியைத் தூவிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.