கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சம்பா கோதுமை ரவை - 1 கப்
2. பாசிப்பருப்பு - 1/2 கப்
3. வெல்லம் - 2 கப்
4. நெய் - அரை கப்
5. ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
6. ஜாதிக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
7. பச்சைக்கற்பூரம் - 1 சிட்டிகை
8. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
9. பாதாம் பருப்பு - 5 எண்ணம்
10. உலர் திராட்சை - 10 எண்ணம்
செய்முறை :
1. அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் சிறிதும் எண்ணெய் விடாமல் எடுத்து வைத்துள்ள சம்பா கோதுமை ரவை மற்றும் பாசிப் பருப்பைத் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்.
2. அதன் பின், ஒரு குக்கரில் இரண்டையும் சேர்த்து நான்கு கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பைக் குறைவான நிலையில் வைத்து கொள்ளவும்.
3. குக்கரில் நான்கு விசில் வரும் வரை அதனை நன்றாக வேக விடவும்.
4. அதன் பின் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி நன்கு கரைத்து, அதனை வடிகட்டிப் பின்னர் ஒரு கடாயில் ஊற்றி அதனை அடுப்பில் வைக்கவும்.
5. வெல்லக்கரைசலின் பச்சை வாசனை போனதுமே, குக்கரில் முன்பு வைத்துள்ள கோதுமை ரவை கலவையில், சர்க்கரைக் கரைசலை ஊற்றி, சிறிய அளவிலான நெருப்பில் கிளறவும்.
6. அதனுடன் ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி மற்றும் முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்துக் கொண்ட பிறகு நெய் விட்டுக் கிளறி எடுத்தால் சுவையான சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல் தயார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.