ஜவ்வரிசி அவல் பொங்கல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அவல் -1கப்
2. ஜவ்வரிசி -1கப்
3. பாசிப்பருப்பு - 1/2 கப்
4. தேங்காய்த் துருவல் - 1/2 கப்
5. நெய் - 50 மி.லி
6. முந்திரிப் பருப்பு- 10 எண்ணம்
7. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. சீரகம் -1 தேக்கரண்டி
10. மிளகு - 1 தேக்கரண்டி
11. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
12. கறிவேப்பிலை - சிறிது
13. இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை :
1. பாசிப்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
2. ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
3. அவலைக் கழுவி நீரை வடித்து ஊற வைத்துக் கொள்ளவும்.
4. அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
5. மீதமுள்ள நெய்யில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு வதக்கவும்.
6. அது வதங்கியதும் வேகவைத்த பாசிபருப்பு, ஊற வைத்த ஜவ்வரிசி, அவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும்.
7. பின்னர் அதில் துருவிய தேங்காயைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
8. வறுத்த முந்திரியை மேலாக வைத்து அலங்கரிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.