தக்காளி புலாவ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 1 கப்
2. தக்காளி - 4 எண்ணம்
3. பச்சைப் பட்டாணி - 25 கிராம்
4. பெரிய வெங்காயம் - 3 எண்ணம்
5. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
6. இஞ்சி - 1 துண்டு
7. பூண்டு - 2 பல்
8. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
10. காய்ந்த மிளகாய் - 4 எண்ணம்
11. நட்சத்திர பூ - 1 எண்ணம்
12. ஏலக்காய் - 2 எண்ணம்
13. பட்டை - 2 துண்டு
14. கிராம்பு - 3 எண்ணம்
15. ஜாதி பத்திரி - 1 எண்ணம்
16. பிரியாணி இலை - 1 எண்ணம்
17. மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
18. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
19. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
20. மல்லித்தழை - சிறிது
21. புதினா - சிறிது
22. நெய் - தேவையான அளவு
23. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி, சுமார் 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாயை நறுக்கி, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி, புதினா, மற்றும் மல்லித்தழையத் தயார் செய்து வைக்கவும்.
3. ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பாதி பெரிய வெங்காயம் நறுக்கியது, சிறிதளவு மல்லித்தழை மற்றும் புதினாவை போட்டு ஒரு மேசைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து அதை அரைத்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து காய வைக்கவும்.
5. நெய் காய்ந்ததும், அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாதி பத்திரி, நட்சத்திர பூ, மற்றும் பிரியாணி இலையைப் போட்டு வதக்கவும்.
6. பின்னர் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் முந்திரி மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
7. வெங்காயம் வதங்கியதும், அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி நன்கு கிளறி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
8. மசாலாவின் பச்சை வாசம் போனதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
9. அடுத்து அதில் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
10. தக்காளி வதங்கியவுடன் அதில் புதினா மற்றும் மல்லித்தழையைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
11. பின்பு ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி இந்த மசாலாவுடன் சேர்த்து அரிசி உடைந்து விடாமல் பக்குவமாக கிளறி விடவும்.
12. அரிசி மசாலாவுடன் சேர்ந்த பின், அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேக விடவும்.
13. ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
14. சுமார் 15 நிமிடத்திற்கு பிறகு, தக்காளி புலாவை ஒரு தட்டில் வைத்துப் பின்னர் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.