செட்டிநாடு காளான் பிரியாணி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 1/2 கிலோ
2. பிரியாணி அரிசி - 400 கிராம்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. தக்காளி - 2 எண்ணம்
5. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
6. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
7. மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
8. சோம்பு - 1/2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. மல்லித்தழை - 25 கிராம்
11. புதினா இலை - 25 கிராம்
12. பச்சை மிளகாய் - 100 கிராம்
13. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
14. நெய் - 3 மேசைக்கரண்டி
15. தேங்காய் பால் - 1/2 கப்
<
16. தயிர் – 2 மேசைக்கரண்டி
17. உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
1. பிரியாணி இலை - 1 எண்ணம்
2. ஏலக்காய் - 3 எண்ணம்
3. பட்டை - 2 எண்ணம்
4. கிராம்பு - 6 எண்ணம்.
செய்முறை :
1. காளானை இலேசான சுடுநீரில் கழுவிச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
2. பிரியாணி அரிசியைச் சிறிது நேரம் நீரில் ஊற வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
5. அதில் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
6. பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும்.
7. அத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
8. தக்காளி நன்கு வதங்கியதும், சுத்தம் செய்து வைத்திருக்கும் காளானைச் சேர்த்து வதக்கவும்.
9. அதன் பிறகு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், சோம்பு, தயிர், தேங்காய்ப் பால் மற்றும் உப்பு சேர்த்து நன்கு குழம்பு போல் கொதிக்க வைக்க வேண்டும்.
10. ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, பிரியாணி அரிசியைப் போட்டு, அத்துடன் குழம்பு போல் கொதிக்க வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து வேக விட வேண்டும்.
11. நன்றாக வெந்ததும் இறக்கி விட வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.