சர்க்கரைப் பொங்கல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி- 500 கிராம்
2. பாசிப்பருப்பு – 200 கிராம்
3. வெல்லம் – 1 கிலோ
4. பால் – 1/2 லிட்டர்
5. நெய் – 100 கிராம்
6. முந்திரிப் பருப்பு – 50 கிராம்
7. கிஸ்மிஸ் பழம் - 50 கிராம்
8. சுக்கு – சிறிது
9. ஏலக்காய் – 10 எண்ணம்
10. தேங்காய் – 1 எண்ணம்
செய்முறை :
1. அரிசியைத் தண்ணீர் விட்டு நன்கு கழுவித் தண்ணீரை வடித்து வைக்கவும்.
2. பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்து வைக்கவும்.
3. ஏலக்காய், சுக்கு இரண்டையும் பொடியாக அரைத்து வைக்கவும்.
4. முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
5. தேங்காயை நன்கு துருவி வைக்கவும்.
6. ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.
7. பால் பொங்கி வரும் போது அரிசியைப் போட்டு நன்கு வேக விடவும்.
8. அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பைச் சேர்த்து நன்கு வேக விடவும்.
9. அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
10. நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
11. அதில் ஏலக்காய், சுக்கு பவுடரைச் சேர்த்து நன்கு கிளறவும்.
12. அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.