மொகல் பிரியாணி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி – 1/2 கிலோ
2. பாசுமதி அரிசி – 2 கப்
3. தயிர் – 1 கப்
4. வெங்காயம் – 2 எண்ணம்
5. இஞ்சிப் பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
6. பச்சை மிளகாய் – 4 எண்ணம்
7. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
8. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
9. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
10. கரம் மசாலாத் தூள் – 1/2 தேக்கரண்டி
11. பட்டை – 1 துண்டு
12. மிளகு – 6 எண்ணம்
13. கிராம்பு – 4 எண்ணம்
14. ஏலக்காய் – 4 எண்ணம்
15. பிரியாணி இலை – 1 எண்ணம்
16. குங்குமப்பூ – 1 சிட்டிகை
17. முந்திரி – 10 எண்ணம்
18. உலர் திராட்சை – 10 எண்ணம்
19. நெய் – 1 மேசைக்கரண்டி
20. எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
21. உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
1. ஆட்டுக்கறியைச் சிறிதாக வெட்டி, நீரில் நன்கு சுத்தமாகக் கழுவி, நீரை முற்றிலும் வடித்து வைக்கவும்.
2. அதில் உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்துப் பிரட்டி, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
4. பின்னர் அதில் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
5. அதன் பிறகு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
6. சுத்தம் செய்து வைத்திருக்கும் ஆட்டுக்கறியைப் போட்டு அனைத்து மசாலாக்களும் அதில் சேரும்படி நன்றாகக் கலந்து விட்டு வதக்கவும்.
7. அதே வேளையில், மற்றொரு அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து, அதில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும்.
8. பின்னர் அதில் முந்திரிப் பருப்பு மற்றும் உலர் திராட்சையைப் போட்டு மிதமான நெருப்பில் வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி அதனுடன் சேர்க்க வேண்டும்.
9. மசாலாக் கலவையுடன் பாதி அளவு வெந்த நிலையிலிருக்கும் ஆட்டுக்கறியை கனமான பாத்திரத்தில் வேகும் அரிசியுடன் சேர்த்துப் பிரட்டி, மூன்று கப் தண்ணீர் ஊற்றித் தேவையான அளவு உப்பு மற்றும் பாலில் கலந்த குங்குமப்பூ சேர்த்து, மிதமான நெருப்பில் சுமார் இருபது நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.