செட்டிநாடு காளான் பிரியாணி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காளான் – 1/2 கிலோ
2. பாசுமதி அரிசி – 2 கப்
3. வெங்காயம் – 1 எண்ணம்
4. தக்காளி – 2 எண்ணம்
5. இஞ்சிப் பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
6. மல்லித்தழை – 1/4 கப்
7. புதினா – 1/4 கப்
8. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
9. எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
10. நெய் – 3 மேசைக்கரண்டி
11. தேங்காய்ப் பால் – 1/2 கப்
12. தயிர் – 2 மேசைக்கரண்டி
13. மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
14. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
15. சோம்புத் தூள் – 1/2 தேக்கரண்டி
16. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
17. உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
18. பிரியாணி இலை – 1 எண்ணம்
19. ஏலக்காய் – 3 எண்ணம்
20. இலவங்கம் – 2 எண்ணம்
21. கிராம்பு – 5 எண்ணம்.
செய்முறை :
1. முதலில் காளானைக் கழுவ வேண்டும். பின் அதனைச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. அரிசியை நீரில் ஊற வைக்கவும்.
4. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை போட்டு, தாளிக்கவும்.
5. அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
6. பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
7. அதில் இஞ்சிப் பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
8. தக்காளி நன்கு வதங்கியதும், காளானைப் போட்டுப் பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், தயிர், தேங்காய்ப் பால் மற்றும் உப்பு சேர்த்து, குழம்புப் பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்கவும்.
9. அதே வேளையில், ஒரு கனமான பாத்திரத்தில், அதில் அரிசியைக் கழுவிப் போட்டு, கொதிக்க வைத்திருக்கும் குழம்பைக் கலந்து, மூன்று கப் தண்ணீரை ஊற்றி, பாத்திரத்தை மூடி வைத்து இருபது நிமிடங்களில் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.