பட்டாணி சாதம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அரிசி – 2 கப்
2. பட்டாணி – 1 கப்
3. கேரட் – 1 எண்ணம்
4. சின்ன வெங்காயம் – 100 கிராம்
5. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
6. தக்காளி – 2 எண்ணம்
7. பச்சை மிளகாய் – 10 எண்ணம்
8. நெய் – 100 கிராம்
9. பட்டை – 2 எண்ணம்
10. கிராம்பு – 4 எண்ணம்
11. சோம்பு – 1/2 தேக்கரண்டி
12. கசகசா – 1/2 தேக்கரண்டி
13. பிரிஞ்சி இலை - 1 எண்ணம்
14. ஏலக்காய் – 3 எண்ணம்
15. இஞ்சி – சிறிய நெல்லிக்காய் அளவு
16. பூண்டு – 50 கிராம்
17. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
18. மல்லித்தூள் – 11/2 தேக்கரண்டி
19. கடுகு – 1/2 தேக்கரண்டி
20. உப்பு – தேவையான அளவு
21. எண்ணைய் – தேவையான அளவு
22. மல்லித்தழை - சிறிது
23. கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை :
1. சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பிரியாணி இலை, ஏலக்காய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
3. அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பின் பட்டாணி, கேரட், சேர்த்து நன்கு வதக்கவும்.
4. பின்னர் அத்துடன், அரைத்து வைத்திருக்கும் மசாலா, மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
5. அதனுடன் அரிசியையும் சேர்த்துக் கிளறவும்.
6. கிளறிய பிறகு இரண்டு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
7. ஒரு கொதி வந்ததும் மேலாகச் சிறிது நெய் விட்டு பாத்திரத்தை மூடி போட்டு வேகவைத்து இறக்கவும்.
8. இறக்கிய சாதத்தைக் கிளறி விட்டு, மேலாக மல்லித்தழை தூவி சூடாகப் பறிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.