கத்தரிக்காய் சட்னி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் - 4 எண்ணம்
2. உருளைக்கிழங்கு - 100 கிராம்
3. வெங்காயம் - 100 கிராம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
8. புளி - சிறிது
9. பெருங்காயத் தூள் - சிறிது
10. கடுகு - 1/4 தேக்கரண்டி
11. சாம்பார் தூள் - 1/2 தேக்கரண்டி
12. கருவேப்பிலை - சிறிது
13. எண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் தக்காளியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. இலேசான சுடு நீரில் சிறிது நேரம் புளியை ஊற வைத்துப் புளிக்கரைசல் எடுக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரில் பாசிப்பருப்பு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வேக வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் மற்றும் நறுக்கிய வெங்காயம் சிறிது சேர்க்கவும்.
6. புளிச் சாறு மற்றும் சாம்பார் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
7. அத்துடன் வேக வைத்த காய்கறி மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றைச் சேர்த்துச் சிறிது நேரத்தில் இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.