கேரட் தக்காளி சட்னி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கேரட் - 2 எண்ணம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
4. தேங்காய்த்துருவல் - 1/2 கப்
5. இஞ்சி - சிறு துண்டு
6. கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
9. கறிவேப்பிலை - சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கேரட்டை தோல் சீவித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தக்காளியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.
4. பின் அதில் மிளகாய் வற்றலைப் போட்டு வறுத்து, அத்துடன் இஞ்சி, தக்காளித் துண்டுகள் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.
5. பின்னர் அத்துடன் கேரட் துண்டுகளைச் சேர்த்து மீண்டும் சில நிமிடம் வதக்கிக் கீழே இறக்கி வைக்கவும்.
6. அதனுடன் தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
7. சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
8. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
9. அரைத்து வைத்திருக்கும் சட்னியில் தாளிசத்தைச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.