சுரைக்காய் மசாலா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சுரைக்காய் – 1 எண்ணம்
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
3. தக்காளி – 4 எண்ணம்
4. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
5. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
6. மல்லித்தூள் – 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
8. பால் – 1/2 கப்
9. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
10. சீரகம் – 1/2 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை – சிறிது
12. எண்ணெய் – தேவையான அளவு
13. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. சுரைக்காயைத் தோல் சீவி, நறுக்கி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெந்தயம், சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
4. அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்ககவும்.
5. பின்னர், அதனுடன் சுரைக்காய்த் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, மிதமான நெருப்பில் வதக்கவும்.
6. அதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. கடைசியாகப் பால் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
8. காய்கள் அனைத்தும் சுருண்டு, கெட்டியான பின்பு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.